×

துணை தொழிற்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

 

மதுரை, பிப்.3: கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017-19ல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு மார்ச் 2024ல் (செமஸ்டர் முறை மட்டும்) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, துணைத் தேர்வு தொடர்பாக முன்னாள் பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற தொழிற் பயிற்சி நிலையங்களை பிப்.15ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுக் கட்டணத்தை தொழிற் பயிற்சி நிலைய வழிகாட்டுதலின்படி செலுத்தி, இந்நல்வாய்ப்பினை பயன்படுத்தி துணைத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், அகில இந்திய துணைத் தொழிற் தேர்வு மார்ச் 2024 குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற http://skilltraining.tn.gov.in மற்றும் https://ncvtmis.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இத்தகவல் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post துணை தொழிற்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,India ,
× RELATED சிறுமிகள் காணாமல் போனதாக பெறப்படும்...